#BREAKING: சிதம்பரம் – 144 தடை உத்தரவு வாபஸ்..!

Default Image

சிதம்பரத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏற்கனவே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய விஐபிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட சில காரணங்களால் யாருக்கும் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சிதம்பரம் நகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாத காலத்திற்கு தடை விதித்து 144 தடை உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்தார்.

இந்நிலையில், சிதம்பரத்தில் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்த வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி 144 தடை உத்தரவு வாபஸ் பெறுவதாக சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வதற்காக காவல்துறை தரப்பில்  கூறியதையடுத்து 144 தடை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்