செஸ் ஒலிம்பியாட் – முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம்

Default Image

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு  செஸ் ஒலிம்பியாட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியின் தொடக்க விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள  உள்ளனர்.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு  செஸ் ஒலிம்பியாட் மற்றும் நிதித்துறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்து சில நாட்கள் ஓய்வுக்கு பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்