செஸ் ஒலிம்பியாட் – புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு..!

Default Image

குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியின் தொடக்க விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள  உள்ளனர்.

இந்த நிலையில், 15-வது குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்களை, தி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி-க்கள் குழு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்