சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.
உலக அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் ‘செஸ் ஒலிம்பியாட்’ 2 ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். நடப்பாண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதலில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு போர் நடைபெற்று வருவதால் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது எனவும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 2500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…