#BREAKING: செஸ் ஒலிம்பியாட் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை- அமைச்சர் அறிவிப்பு..!

Default Image

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

உலக அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் ‘செஸ் ஒலிம்பியாட்’  2 ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். நடப்பாண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதலில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு போர் நடைபெற்று வருவதால் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது எனவும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 2500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்