சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Default Image

சென்னையில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, இதுவரை மொத்தமாக 1,724 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில், இன்று மட்டுமே 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் இதுவரை 1,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இன்று மட்டுமே 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை சென்னையில் மட்டும் 1,724பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா அதிகம் பேருக்கு பரவியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டுமே 527 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,550ஆக உள்ளது. மேலும் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 2,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price
Ilaiyaraaja Symphony
virat kohli about aus