இரவு ஊரடங்கு காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

Published by
Rebekal

இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் அதிரடியாக மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தனது வீரியத்தை அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் ஊரடங்கும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பேருந்துகள் மற்றும் ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக இரவு நேர ஊரடங்கு நேரத்தில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது போலவே சென்னை மின்சார ரயில் சேவைகளும் இரவு நேரத்தில் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில்கள் இயக்கப்பட மாட்டாது எனவும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் எந்த ரயில் நிலையத்திலிருந்து ரயில் இயக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு அளவிலேயே ரயில்கள் இயக்கப்படும் எனவும், அதிலும் முன் களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார நாட்களில் 434 ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 86 ரயில்களும் மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

5 hours ago

“முதலில் களத்திற்கு வர சொல்லுங்க”..த.வெ.கவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…

7 hours ago

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

8 hours ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

8 hours ago

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…

9 hours ago

10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க  விசாரணை அமைப்பு ஆகும். இந்த…

9 hours ago