இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் அதிரடியாக மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தனது வீரியத்தை அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் ஊரடங்கும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பேருந்துகள் மற்றும் ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக இரவு நேர ஊரடங்கு நேரத்தில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது போலவே சென்னை மின்சார ரயில் சேவைகளும் இரவு நேரத்தில் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில்கள் இயக்கப்பட மாட்டாது எனவும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் எந்த ரயில் நிலையத்திலிருந்து ரயில் இயக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு அளவிலேயே ரயில்கள் இயக்கப்படும் எனவும், அதிலும் முன் களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார நாட்களில் 434 ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 86 ரயில்களும் மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…