சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில்வேலை செய்து வரும் மோகனாவும், ரூகேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே ரயில் நிலையத்தில் வேலை செய்து வருவதால் இருவருக்கும் மாறி மாறி வேலை இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் ஒன்றாக இருக்க முடியாத சூழல் உருவாகியது.
அந்த சமயத்தில் மோகனாவுக்கு வீராச்சாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீராச்சாமி ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வருபவர். இருவரும் பேசி பழகி நாளடைவில் அது கள்ளக்காதலாக உருமாறியுள்ளது. இந்த விஷயம் ரூகேஷிற்கு தெரிந்ததும் அவர், மோகனாவை திட்டியுள்ளார். ஆனால் அதனைக் கண்டு கொள்ளாத மோகனா வீராசாமியுடனான கள்ள காதலை தொடர்ந்துள்ளார்.
பின்னர், சென்னையில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து மோகனாவும், வீராச்சாமியும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது திடீரென அந்த லாட்ஜில் இருந்து வீராச்சாமி காணாமல் போயுள்ளார். இவர்கள் தங்கியிருந்த ரூம் மூடப்பட்டிருந்ததால். சந்தேகமடைந்த லாட்ஜ் உஊழியர்கள் அந்த ரூம் கதவை போலீசார் உதவியுடன் உடைத்து சென்று பார்த்தபோது, அந்த ரூமில் மோகனா தூக்கில் தொங்க விடப்பட்டிருந்தது தெரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், மோகனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர், தூக்கில் தொங்கவிட பட்டுள்ளது தெரிந்தது. அதன் பின்னர் போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கினர். போது மோகனாவுக்கும் வீராசாமிக்கும் கள்ளகாதல் வெளியில் தெரிந்துள்ளது.
பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் வீராசாமி பிடிப்பாட்டன். பிறகு வீராசாமியிடம் விசாரிக்கையில், மோகனாவும் வீராசாமியும் லாட்ஜில் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது, இருவருகுள்ளும் சண்டை வந்து முற்றி போய், மோகனவை கழுத்தை நெரித்து கொன்றதாக வீராசாமி ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அதிலிருந்து தப்பிக்க, மோகனாவை தூக்கில் தொங்கவைத்துவிட்டு தப்பித்து விட்டதாக போலீசாரிடம் வீராசாமி கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…