பொதுமக்களை கதிகலங்க வைத்திருக்கும் பாலிடெக்னிக் மாணவர் மீதான துப்பாக்கி சூடு! வழக்கின் 'திடுக்' பின்னணி!

Published by
மணிகண்டன்

கடந்த 5ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ் தன் நண்பர் விஜயால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த சம்பத்தில் தேடப்பட்டு வந்த விஜய் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் போலீசார் விசாரணையில் உள்ளார்.
இது குறித்து, தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னையின் புறநகர் பகுதியாக கருதப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தாழம்பூர், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், காயார் என சுற்றுவட்டார பகுதிகளில் வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கும், படிப்பிற்க்காகவும் வரும் இளைஞர்கள் அப்பகுதிகளில் தங்குகின்றனர்.
அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் கும்பல்கள் அந்த பகுதியில்  அதிகம். அதில் அவர்களுக்குள் நடக்கும் யார் பெரியவன் என்கிற சண்டைகளில் தற்போது கள்ளத்துப்பாக்கிகளின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. இந்த கள்ளத்துப்பாக்கி விவகாரம் மாணவர் முகேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த கும்பலில் முக்கியமான இரு கேங்குகளில் ஒன்று நெடுங்குன்றம் சூர்யா இன்னொருன்று பெருமாட்டுநல்லூர் செல்வம்.. இதில் சரணடைந்த விஜய் பெருமாட்டுநல்லூர் செல்வம் கேங்கை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சரணடைந்த விஜய், இதற்க்கு முன்னர் 2017ஆம் ஆண்டு ஒரு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

8 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

16 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago