சென்னை மக்களை சொந்த ஊருக்கு துரத்திய கொரோனா வைரஸ் !

கொரோனா வைரஸ் காரணமாக சென்னை மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரேனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. இதில் 1379 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 1611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று(மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் நாள்தோறும் அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். அரசிடம் உரிய அனுமதி பெற்றுள்ள வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வாகனங்கள் படையெடுத்து நிற்கின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025