IOC -Chennai [File Image]
சென்னை தண்டையார்பேட்டை உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOC) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாயிலர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பிற்பகல் 12 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாயிலர் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும் அலறியடித்து ஓடினர். அப்போது, பாயிலர் அருகே பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களான பெருமாள் மற்றும் 2 பேர் விபத்தில் சிக்கினர்.
பாயிலர் வெடித்ததை தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, விபத்தில் சிக்கிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், அதில் கரிமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (52) என்பவர் உயிரிழந்துள்ளார்.
எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு: பாதுகாப்பு தணிக்கை சான்றிதழ் அவசியம் – அன்புமணி ராமதாஸ்!
ஏற்கனவே, நேற்றிரவு எண்ணூர் அருகே உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவைத் தொடர்ந்து, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் வடசென்னை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…