ஆன்லைனில் புக் செய்து பணம் செலுத்தியும் தண்ணீர் பெறலாம்! சென்னை மெட்ரோ வாட்டர் அதிரடி திட்டம்!

Default Image

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் இதற்கான தேவையை தற்போது பூர்த்தி செய்ய, மக்களுக்கு விரைவில் தண்ணீர் கிடைக்க தற்போது சென்னை மெட்ரோ தற்போது புதிய எளிதான வழியை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

டயல் ஃபார் வாட்டர் 2.O ( Dial for water 2.O )  எனும் திட்டத்தின் மூலம், சென்னை மக்கள் தங்களுக்கு வேண்டிய தண்ணீரை அளவுக்கு ஏற்றார் போல போன் மூலமாகவோ, ஆன்லைனிலோ புக் செய்து கொள்ளலாம். பதிவு செய்த நாளில் இருந்து 48 மணி நேரத்தில் தண்ணீர் வந்து விடும். அந்த தண்ணீருக்கான பணத்தை ஆனலைனில் செலுத்தி கொள்ளும் வசதியும் உள்ளது. இது குறித்த மற்ற அறிவிப்புகள் சென்னை மெட்ரோ வாட்டர் டிவிட்டர் பக்கத்தில் உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 ஆயிரம் முதல் 16 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் பதிவு செய்து கொள்ளலாம். அதே போல, தனி வீடு உள்ளவர்கள் 3 ஆயிரம் முதல் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் புக் செய்து கொள்ளலாம்.

இதில் 3000 லிட்டர் தண்ணீர் 400 ருபாய் எனவும், 6000 லிட்டர் தண்ணீர் 475 எனவும், 9000 லிட்டர் தண்ணீர் 700 ருபாய் எனவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்