10ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி உறவு கொண்டு வேறு பெண்ணை மணந்த இளைஞர்!

Default Image

சென்னை, புழல் பகுதியை சேர்ந்துள்ள 10 ஆம் வகுப்பு மாணவியின் தாயார் , சென்னை சமூக நல அதிகாரியிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ தனது 10ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உள்ளார்.

மேலும், இப்படி ஆசை வார்த்தை கூறி பல முறை தனது பெண்ணுடன் உறவு வைத்து கொண்டுள்ளார். ஆனால் அவர் என் பெண்ணை ஏமாற்றி விட்டு, தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.’ என புகார் அளித்து இருந்தார்.

இதனை விசாரித்த அதிகாரிகள், மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்