2 நாள் மழைக்கே சென்னை கடல் போல் காட்சியளிகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் சென்னையில் தொடர்ச்சியாக இது போன்று மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் 2 நாள் மழைக்கே சென்னை கடல் போல காட்சியளிப்பதாகவும், கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலை தான் நீடிக்கிறது எனவும் கூறியுள்ளார். மேலும், ராட்சத வடிகால் வசதி செய்யப்பட்டு நிரந்தர தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…