சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
சென்னை , கலாஷேத்ரா கல்லூரியில் 4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்து , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி, கடந்த மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தொடர் போராட்டம் நடத்தினர்.
ஆன்லைன் தேர்வு :
இந்த போராட்டத்தை அடுத்து, கல்லூரியானது ஏப்ரல் 6ஆம் தேதி வரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவிகளின் செமஸ்டர் தேர்வுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும், ஆன்லைன் முறையில் தேர்வு வைக்கவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்ததாக தெரிகிறது .
அவசர ஆலோசனை :
ஆன்லைன் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, இன்று கல்லூரி நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.
ஏப்ரல் 5 தேர்வு :
இந்த ஆலோசனை கூட்டத்தை அடுத்து, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. எங்கு, எப்படி தேர்வுகள் நடைபெறும் என்ற முழு விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலியல் புகார் விசாரணை :
4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…