மாணவிகளின் கோரிக்கைகள் ஏற்பு.? செமஸ்டர் தேதியை அறிவித்த கலாஷேத்ரா கல்லூரி.!

Default Image

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 

சென்னை , கலாஷேத்ரா கல்லூரியில் 4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்து , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி, கடந்த மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தொடர் போராட்டம் நடத்தினர்.

ஆன்லைன் தேர்வு :

இந்த போராட்டத்தை அடுத்து, கல்லூரியானது ஏப்ரல் 6ஆம் தேதி வரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவிகளின் செமஸ்டர் தேர்வுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும், ஆன்லைன் முறையில் தேர்வு வைக்கவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்ததாக தெரிகிறது .

அவசர ஆலோசனை :

ஆன்லைன் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, இன்று கல்லூரி நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.

ஏப்ரல் 5 தேர்வு :

இந்த ஆலோசனை கூட்டத்தை அடுத்து, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. எங்கு, எப்படி தேர்வுகள் நடைபெறும் என்ற முழு விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலியல் புகார் விசாரணை :

4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்