#ChennaiBudget:கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்வு – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Default Image

சென்னை:மாநகராட்சிக்கான பட்ஜெட்டில் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு, மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-வது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றது.

இந்நிலையில்,சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 வார்டுகளுக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்