போலாந்து நாட்டிற்கு பங்கேற்பதற்கு சமீஹா பர்வீன் அழைத்துச் செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலந்து நாட்டில் நடைபெறக்கூடிய தடகளப் போட்டியில் கலந்து கொள்வதற்கு குமரியை சார்ந்த செவித்திறன் குறையுடைய சமீஹா பர்வீன் தகுதி பெற்றார். தகுதி பெற்றவர்களில் நான்கு பேர் ஆண்கள் எனவும், இவர் ஒருவர் பெண் என்பதால் அவர்களுடன் இணைத்து அனுப்ப முடியாது என்று தேசிய விளையாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனால், போலாந்து சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பர்வீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது விளையாட்டு ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால் போட்டி வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறுவதால் அவகாசம் வழங்கப்பட்டால் பர்வீன் தடுக்கப்படுவார் என்பதால் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்றைக்குள் பதில் தர நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் தேசிய விளையாட்டு ஆணையம் அளித்த பதிலில் தடகளத்தில் தகுதி சுற்றில் 8வது இடம் பிடித்ததால் தான் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் பெண் என்றதால் வாய்ப்பு மறுக்கப்பட்டது என கூறுவது தவறு என தெரிவித்தனர்.
இதைஏற்க மறுத்த நீதிபதி தடகள தகுதி சுற்றில் சமீஹா பர்வீன் 8வது இடம் பிடித்தாலும் பெண்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். எனவே போலாந்து நாட்டிற்கு பங்கேற்பதற்கு சமீஹா பர்வீன் அழைத்துச் செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…