மின் கணக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மின் கணக்கீடு எடுக்காத நிலையில், தற்பொழுது ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு எடுக்கப்பட்டு, அதற்கான மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பலரும் அதிருப்தி அடைந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது, மின் கணக்கீடு முறையில் எந்த விதி மீறல் இல்லை என இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ள காரணத்தினால் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…