நாளை நடைபெறும் லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டம் …!பங்கேற்க முடியாது…!மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

Default Image

நாளை நடைபெறும் லோக் ஆயுக்தாவின் தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லோக் ஆயுக்தா அமைப்பு தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்ய நாளை கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக  தமிழக அரசு பணியாளர், நிர்வாக சீர்த்திருத்துறை செயலாளருக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில்,   நாளை நடைபெறும் லோக் ஆயுக்தாவின் தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது.தமிழகத்தில் அமைய இருக்கும் லோக் ஆயுக்தா அமைப்பு அதிகாரமற்றது. ஊழல் புகாருக்கு ஆளான முதல்வர், கூட்டத்தில் பங்கேற்பது ஊழல் ஒழிக்க உதவாது . முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிப்பது லோக் ஆயுக்தா.ஊழல் புகார் கொடுப்போர் அஞ்சும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.வெளிப்படையான விசாரணைக்கு வித்திடாமல் லோக் ஆயுக்தா அமைப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்