906 பம்புகள் ரெடி.. 114 இடங்களில் தீவிர பணி.. மழைநீர் எங்கும் தேங்கவில்லை.! – சென்னை மாநகராட்சி தகவல்.!

Published by
மணிகண்டன்

906 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. சென்னை மாநகராட்சி தகவல். 

இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை சுற்றுவட்டாரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழை அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. சென்னையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அதனை சமாளிக்க சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி பதிவிடுகையில்,  சென்னை மாநகராட்சியில் 906 மோட்டார் பம்புகள் மழைநீரை வெளியேற்ற தயார் நிலையில் இருக்கிறது. அதில், மோட்டார் பம்புகள் மூலம் 114 இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. என்றும்,

சென்னையில் பெய்த மழையால் இன்று காலை 2 மரங்கள் முறிந்து விழுந்தன. அது தற்போது அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.

Recent Posts

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

24 minutes ago

நெட் சும்மா பிச்சுக்க போகுது! எலான் மஸ்க் உடன் இணைந்த ஏர்டெல்!

சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…

49 minutes ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

1 hour ago

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

10 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

11 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

12 hours ago