#Breaking:சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் தேதி – வெளியான முக்கிய அறிவிப்பு!

Default Image

சென்னை:மாநகராட்சி பட்ஜெட் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

2022-23 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகராட்சியின் வரவு செலவு திட்டம்(பட்ஜெட் தாக்கல்) சமர்பிப்பதற்கான கூட்டம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நடைபெறுகிறது. மேலும்,பட்ஜெட் மீதான விவாதம் அன்றைய தினமே நடைபெற்று கூட்ட இறுதியில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளாக மாநகராட்சி தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில்,2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் தாக்கல் செய்கிறார்.இதனால்,அனைத்து கவுன்சிலர்களும் இந்த பட்ஜெட் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சென்னை மேயர் பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்