நிவர் புயல் கரையை கடந்து உள்ளதால் சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைப்பட்டிருந்த மாநகர பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவாகிய நிவர் புயல் காரணமாக நேற்று முழுவதும் முழு தமிழகமே பதட்டத்தில் காணப்பட்டது. அதுவும் கடலோரப் பகுதிகளில் உள்ள சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு இருந்த நிலையில், புயலானது நேற்று இரவு 11:30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிரமாக நகர்ந்து வந்த புயல் வலுவிழந்து கரையை கடந்தது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களிலும் இதனால் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதியில் காற்றின் வேகமும் மழையும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. நகரின் உட்பகுதியில் லேசாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் தற்பொழுது நிவர் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவைகள் துவங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்பட்டுக்கொண்டுள்ளது.
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…