நிலமோசடி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் சூரி, அக்டோபர் 29 ஆம் தேதிக்குள் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகர் சூரியுடன் நடிகர் விஷ்ணு விஷால் வீர தீர சூரன் எனும் படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படம், சில காரணங்கள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில் நிலம் வாங்க வேண்டுமென நடிகர் சூரி, விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷிடம் கூறினார்.
அதற்கு அவர், சிறுசேரியில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி தருவதாக 3 கோடியே 10 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். சூரி வாங்கிய நிலத்தின் அளவு, 3.10 கோடியை விட மிக கம்மி எனவும், நிலத்தின் மதிப்பை கூட்டி போலி ஆவணம் தயாரித்து தன்னிடம் விற்றது சூரிக்கு தெரியவந்துள்ளது.
மேலும், நிலம் வாங்கித் தருவதாக 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும், வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
இந்நிலையில், நில மோசடி தொடர்பாக விஷ்ணு விஷால் தந்தை மீது புகாரளித்த நடிகர் சூரி, அக்டோபர் 29ம் தேதிக்குள் நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…