சென்னையில் பிராமணர்களின் பூணூல் அறுப்பா ?

Published by
Dinasuvadu desk

மைலாப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பூணூல் அறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் (பேஸ் புக், வாட்ஸ்அப் ) தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,   திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போன்று, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று  முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தனது முகநூல் பக்கத்திலிருந்து அந்த பதிவை நீக்கியுள்ளார். மேலும், இதற்கு விளக்கமளித்து அவர் கூறுகையில், நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் பெரியார் அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு எனது முகநூல் அட்மின் என் அனுமதியின்றி பதிவு செய்துள்ளார்.

எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். எனது பதிவிற்கான கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே தவிர வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹெச்.ராஜாவின் பதிவைத் தொடர்ந்து, நேற்று சென்னை மைலாப்பூர் பகுதியில், 12 பிராமணர்களின் பூணூல், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் அறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் வேலூரில், உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என்று வெளியான தகவலைத் தொடர்ந்து பெரியார் சிலை அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஹெச்.ராஜாவின் பதிவையடுத்து, வேலூர் ராணிப்பேட் பகுதியில் அவரது உருவபொம்மையை எரித்து ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

13 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago