ஒலிம்பிக் போட்டியில் சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் பா.நாகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் பா.நாகநாதன். இவர் தடகள வீரராக பல பதக்கங்களை வென்றுள்ளார். அனைத்திந்திய காவல் பணித்திறனாய்வு தொடர் ஓட்ட போட்டியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார். மேலும், கடந்த மார்ச் மாதம் ஒலிம்பிக் தகுதி தேர்வு போட்டியில் நாகநாதன் கலந்து கொண்டு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்றுள்ளார். இவரின் கடுமையான முயற்சி மற்றும் பயிற்சிகளால் ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்க இவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
தற்போது ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இந்தியாவிற்கு தங்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளும் ஆயுதப்படை காவலர் பா.நாகநாதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…