கள்ள காதலனை தீர்த்துக்கட்ட கணவன் உதவியை நாடிய பெண்! திடுக்கிடும் தகவல்கள்!

Published by
மணிகண்டன்
  • சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.
  • இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவகுமார் மாதேஸ்வரி தம்பதியினரால் கொலை செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது.

சென்னை அனகாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். இது குறித்து கார்த்திக்கின் உறவினார்கள் போலீசில் புகாரளித்தனர். போலிஸ் விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பக்கம் கார்த்திகேயனின் செல் போன் அணைக்கப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில் பல திடுக் தகவல்கள் வெளியாகின. அதாவது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சிவகுமார் – மாதேஸ்வரி தம்பதி சென்னையில் சில காலங்கள் வசித்து வந்துள்ளனர். அப்போது, மாதேஸ்வரிக்கும், கார்த்திகேயனுக்கு தவறான பழக்க வழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்து சிவகுமார், தனது மனைவி மாதேஸ்வரியை அழைத்து கொண்டு சித்தூர் சென்றுவிட்டார். இருந்தாலும் கார்த்திகேயன் தொடர்ந்து மாதேஸ்வரிக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால், கார்த்திகேயனை கொலை செய்ய திட்டமிட்ட மாதேஸ்வரி, அதற்கு தன் கணவனிடம் ஒரு பொய் கூறியுள்ளார்.

அதாவது, மாதேஸ்வரி, தான் குளிக்கும் புகைப்படத்தை தானே வீடியோ எடுத்து, அதனை தன் கணவர் சிவகுமாரிடம் காட்டி, இந்த வீடியோ கொண்டு கார்த்திகேயன் என்னை மிரட்டி வருகிறார் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், தன் மனைவி மூலமாக கார்த்திகேயனை வரவழைத்து, அவரை கொலை செய்துவிட்டு தன் வீட்டு பின்புறமே புதைத்துவிட்டனர்.

இது போன்ற தவறான பழக்கவழக்கம் கொண்டவர்களுக்கு மட்டும் இது பாதிக்காது. அவரை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும் என்பதை சற்று புரிந்து கொள்ள வேண்டும்.இந்த சம்பவம் தவறான பழக்கவழக்கம் கொண்டவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

21 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

42 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

44 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago