சென்னை விமான நிலையம் : கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு …!

Default Image

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தற்பொழுது ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் கோரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பரிசோதனைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரைப்படி பரிசோதனைக்கான கட்டணத்தை விமான நிலைய ஆணையரகம் குறைத்துள்ளது. இதுவரை 3,400 ரூபாயாக இருந்த ரேபிட் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணம் தற்போது 2900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் 700 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்