சென்னை: கடந்தாண்டு தீபாவளியை விட இந்தாண்டு காற்று மாசு குறைவு.!

Default Image

சென்னையில் கடந்தாண்டு தீபாவளியை விட இந்தாண்டு தீபாவளிக்கு காற்று மாசு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.பல மாதங்களாக நாடையே உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .ஆனாலும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது .

மேலும் ஒரு சில இடங்களில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசுகளை விற்கவும்,வெடிக்கவும் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் தலைநகரான டெல்லியில் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் பட்டாசு வெடிக்கவும்,விற்பனை செய்யவும் நவம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தடையை மீறி அங்கு பட்டாசுகளை வெடித்துள்ளனர்.

எனவே காற்று மாசு மேலும் அதிகரித்து மோச நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது . அதே நேரத்தில் சென்னையில் காற்று மாசு கடந்த தீபாவளியைக் காட்டிலும் நடப்பு ஆண்டு தீபாவளிக்கு குறைந்துள்ளதாக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,சென்னையில் கடந்த தீபாவளியை காட்டிலும் நடப்பு ஆண்டிற்கான தீபாவளிக்கு காற்று மாசு மற்றும் ஒலி மாசு குறைந்துள்ளது. ஒலி மாசானது 4 முதல் 6 டெசிபல் வரை குறைந்துள்ளதாகவும்,ஆனால் சென்னை திருவல்லிக்கேணியில் மட்டும் காற்றின் தரக்குறியீடு 97-லிருந்து 107-ஆக அதிகரித்து காற்று மாசுபட்டு உள்ளதாகவும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்