கப்பல் மாலுமியின் மனைவி சென்னை காசிமேட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராயபுரத்தைச் சேர்ந்த கப்பல் மாலுமி பிரேம்குமாருக்கும் காசிமேட்டைச் சேர்ந்த அனிதாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பு பிரேம்குமார் மும்பை சென்றுள்ளார்.
அங்கிருந்து நேற்று அனிதாவுடன் செல்பேசியில் தொடர்புகொண்ட பிரேம்குமார், தகாத முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்ணான அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் அனிதாவின் உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணமாகி ஆறு மாதமே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்துக் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…