காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேங்கடமங்கலத்தில் தனது நண்பர் விஜய் என்பவரது வீட்டிற்க்கு சென்ற பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் அவரது நண்பர் விஜயின் கையாலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக தேடப்பட்டு வந்த விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது துப்பாக்கி பற்றியும், அது எவ்வாறு கிடைத்தது பற்றியும், பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது விஜய் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளாராம். அதில், சென்னையை அடுத்த பெருமாட்டுநல்லூரை சேர்ந்த ஒரு ரவுடியிடம் துப்பாக்கி வாங்கியதாகவும், தனது நண்பர் முகேஷை அந்த ரவுடி கும்பலிடம் சேர சொல்லி கேட்டதாகவும், முகேஷ் மறுக்கவே கோபத்தில் அவரை சுட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார். அந்த துப்பாக்கி குறிப்பிட்ட ஒரு கல்குவாரியில் இருந்ததாகவும் கூறியிருந்தார்.
இதனை அடுத்து, அந்த துப்பாக்கி கல்குவாரியில் இருந்து எடுக்கப்பட்டது. துப்பாக்கி கிடைத்துவிட்டதால் அடுத்து விசாரணை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…