பாலிடெக்னிக் மாணவன் உயிரை பிரித்த துப்பாக்கி எப்படி வந்தது?! வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

Default Image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேங்கடமங்கலத்தில் தனது நண்பர் விஜய் என்பவரது வீட்டிற்க்கு சென்ற பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் அவரது நண்பர் விஜயின் கையாலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக தேடப்பட்டு வந்த விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது துப்பாக்கி பற்றியும், அது எவ்வாறு கிடைத்தது பற்றியும், பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது விஜய் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளாராம். அதில், சென்னையை அடுத்த பெருமாட்டுநல்லூரை சேர்ந்த ஒரு ரவுடியிடம் துப்பாக்கி வாங்கியதாகவும், தனது நண்பர் முகேஷை அந்த ரவுடி கும்பலிடம் சேர சொல்லி கேட்டதாகவும், முகேஷ் மறுக்கவே கோபத்தில் அவரை சுட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.  அந்த துப்பாக்கி குறிப்பிட்ட ஒரு கல்குவாரியில் இருந்ததாகவும் கூறியிருந்தார்.
இதனை அடுத்து, அந்த துப்பாக்கி கல்குவாரியில் இருந்து எடுக்கப்பட்டது. துப்பாக்கி கிடைத்துவிட்டதால் அடுத்து விசாரணை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்