ஆட்சியர் நேரடி பார்வையில் சாத்தன்குளம் காவல் நிலையம்-உயர்நீதிமன்றம் அதிரடி!

Published by
kavitha

நிதித்துறை நடுவரை காவலர்  ஒருவர் உன்னால் ஒன்றும்*** முடியாதுடா என்று தடித்த வார்த்தைகளில்  வசைப்பாடிய அநாகரீக செயலானது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் விசாரித்து வரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை  வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கொண்டுவர உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன்  மரணம் குறித்து தாமாக முன்வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  இம்மரணம் தொடர்பான விசாரணையை கடந்த திங்கள்கிழமையில்  நடத்தி முடித்துள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக  மதுரைகிளை நீதிமன்ற பதிவாளருக்கு கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து இமெயிலில் இருந்து பறந்து உள்ளது ஒரு புகார்.

நீதித்துறை நடுவரிடம் இருந்து வந்த புகார் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி கூறுகையில்: உயர் நீதிமன்ற நீதிபதிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதித்ததுறை நடுவர் விசாரணை நடத்தியபோது கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் முன்னிலையில் போலீசார் வீடியோ எடுத்ததாகவும், தேவையான ஆவணங்களை தராமல் வழக்கு தொடர்பாக அவர்கள் ஒத்துழைக்க வில்லை என்று அதில் சுட்டிக்காட்டியதாகவும்  மகாராஜன் என்ற காவலர் உன்னால் ஒன்றும் செய்ய முடியாதுடா போன்ற தடித்த வார்த்தைகளில் நீதித்துறை நடுவரை திட்டியதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய உத்தரவிடுவதாகவும் உடனடியாக மூவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதாக குறிப்பிட்டனர்.

மேலும், நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இன்று ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் நீதிபதியை தடித்த வார்த்தைகளால் திட்டிய காவலர் மகாராஜனை மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்துள்ளார்.தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெறும் சூழ்நிலையில்  வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கொண்டுவர உத்தரவிட்ட நீதிபதிகள்; வட்டாசியர் செந்தூர் ராஜ் என்பவரை பொறுப்பாளராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.மேலும் காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

2 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

2 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

3 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

3 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

5 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

6 hours ago