#Breaking : பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Default Image
  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 
  • தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக  தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில், ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது .அந்த கோரிக்கையில் ,தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2 -ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்பு உள்ளதால் பள்ளிகளை ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜனவரி 4 திறந்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது .2020ஆம் ஆண்டின் முதல்வேலை நாளை புத்துணர்வோடு தொடங்க ஏற்ற சூழல் இருக்காது என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கு ஏற்றவாறு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், 3ஆம் தேதி திறக்கப்படும் என்று இருந்த நிலையில் 4ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்