மூன்றாவது அணியை உருவாக்கும் சந்திரசேகர ராவின் பகல் கனவு பலிக்காது – நாராயணசாமி

Published by
Dinasuvadu desk

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தெரிவிக்கையில், “கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை மத்திய நீர்வளத் ஆணையத்திடம் சமர்ப்பித்து அனுமதி கேட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டு அணை கட்ட அனுமதி வழங்கியது என்று தெரிவித்தார்.
இதனால், தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைவார்கள் என்பதை அறிந்து மத்திய நீர்வள அமைச்சர் நிதின் கட்கரியிடம் எதிர்ப்பு தெரிவித்தேன். மேலும், அணை கட்டுவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யும்படியும் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.
சிங்கபூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் 7 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால், எந்தவித திட்டமும் இல்லாமல் பா.ஜ.க. அரசு ஜிஎஸ்டி வரி முறையை அமலுக்கு கொண்டு வந்து தற்போது, 31 பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளனர். ஐந்து மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்வியே ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதற்கு காரணம் என குறிப்பிட்டார்.
மூன்றாவது அணியை உருவாக்கும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பகல் கனவு பலிக்காது என்றும் நாராயணசாமி குறிப்பிட்டார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago