இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், சென்னை நகரில் சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.