தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

Default Image

தமிழகத்தில் வடமேற்கு வங்ககடல், ஒடிசா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அந்த வகையில் நீலகிரி, கோவையில் அதிக கனமழை பெய்யும்; சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது, மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலிற்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்