அடுத்த ஒரு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.!

Default Image

அடுத்த ஒரு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 1 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம், செஞ்சி, ஆகிய இடங்களில் 5 செ.மீ மழையும், மகாபலிபுரம், வேலூர், ஆகிய இடங்களில் 4 செ.மீ மழையும், பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்