தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

Default Image

வெப்பச்சலனம் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு  கோவை, தேனி, நீலகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் புதுவை ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

என்றும் ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்