தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

Default Image

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 100 டிகிரி குறைந்தபட்சம் 80 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்