தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு..!

Default Image

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நாளை 13 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு ஆந்திரா மற்றும், தெற்கு ஓடிசா ஒட்டிய கடற்பகுதியில், நிலவுகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நாளை 13 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை 13.07.2021 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தேனி  தென்காசி ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை , திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் 14.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவும்.

15.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியதேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும், தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
IndvsAusSfinal
TN CM MK Stalin
steve smith travis head
Actress Vijayalakshmi
tvk vijay ADMK jayakumar
Russia-Ukraine war