9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

Default Image

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.

தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வடகடலோர மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் கோவை, நீலகிரி, சேலம், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது .

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தென் மேற்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.

செப்டம்பர் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய தேதிகளில் கேரளா லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்