தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கல்பாக்கத்தில் 13, ரிஷிவந்தியத்தில் 11 செ.மீ மலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.