13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

Default Image

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, குமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் அநேக இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  ஜாவத் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா மாநிலம் பூரியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதி வடக்கு ஆந்திரா ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்