தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் எனவும், வேலூர் , ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீட்டிக்கும் எனவும், 5 நாட்களுக்கு தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்வர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம். சென்னையை பொறுத்தவரை மிதனமான மழை தொடரும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.