தலைமைக்காவலர் மகளிடம் 16 சவரன் நகை திருட்டு ! தலைமறைவான நபரை பிடித்த காவல்துறை !

Published by
Surya

சென்னை நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர், சசிகுமார். இவர் கடந்த ஒன்றாம் தேதி வடபழனியில் உள்ள வள்ளி என்ற திருமண மண்டபத்தில் தனது உறவினரின் திருமண விழாவில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவர் மகளின் கழுத்தில் இருந்த நான்கு சவரன் நகை காணாமல் போயின.

இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் அவரது மகளிடம் மர்ம நபர் ஒருவர் பேசிக்கொண்டே, அவளின் கழுத்தில் இருந்த நான்கு சவரன் நகையை திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வேலூருக்கு சென்ற தனிப்படை போலீசார் தலைமறைவாக இருக்கும் அந்த நபரை கண்டுபிடித்தனர். அவர் வேலூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் திருமண மண்டபங்களில் குழந்தைகளின் கழுத்தில் இருக்கும் நகைகளை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும், அவர் மீது 7 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.அவரிடமிருந்த 16 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர். விசாரணைக்குப் பின்னர், அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Published by
Surya

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

23 minutes ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

1 hour ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

1 hour ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

2 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

2 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

3 hours ago