“ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ.10,775 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்”- அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை

Published by
Surya

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ.10,775 கோடியை உடனே வழங்க மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது தொடா்பான 42 ஆம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காணொளி மூலம் கலந்துகொண்டார். அதில் உரையாற்றிய அமைச்சர், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்த விவகாரத்திற்கு ஒரு சுமுக முடிவினை காண்பதற்கு எடுத்துவரும் முயற்சிக்கு நன்றி செலுத்துவதாக கூறினார்.

மேலும், கொரோனா பரவும் இந்த சூழலில், ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என தமிழக அரசு கவனம் கொண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் முதலாவது விருப்பத் தேர்வை ஏற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு கண்டு, உடனே மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்கினால், பொருளாதாரத்தை புதுப்பிக்க முடியும்.

தமிழகத்துக்கு கடந்த வாரம் இழப்பீடாக ரூ.1,483 கோடி வழங்கியதற்கு நன்றி தெரிவித்த அவர், கடந்த ஜூலை வரையிலான தமிழகத்துக்கு வழங்கிய இழப்பீட்டு தொகையான ரூ.10,774.98 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி, 2017-2018 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.4,321 கோடியை விரைவில் வழங்க உறுதியளித்தற்க்கும் நன்றி தெரிவித்தார்.

Published by
Surya

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

10 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

10 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

10 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

11 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

11 hours ago