மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசின் அலுவலங்கள் முன்பு நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.
இந்தாண்டு நடைபெற இருக்கும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதனிடையே, நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.
மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது. இதனால் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கே.எஸ் அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவுகிற பதற்றமான சூழலின் அடிப்படையில், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை உடனடியாக தள்ளிவைக்க வேண்டும் என்றும் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இதன்காரணமாக மாணவர்கள் அச்சப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…