மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டமான “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தின் அதிகமாக நிதி உதவி பெறும் மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
ஏழை மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டமான “ஆயுஷ்மான் திட்டம்” கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் “ஆயுஷ்மான் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், இதுவரை இந்த திட்டத்திற்கு 3 ஆயிரத்து 71 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் 641 கோடி ரூபாய் நிதி பெற்று குஜராத் முதலிடம் பெற்றுள்ளது. 344 கோடி ரூபாய் நிதி பெற்று தமிழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் இந்த காப்பீடு திட்டத்தில் கீழ் 11 ஆயிரத்து 75 பேர் பயன் பெற்றுள்ளனர். பயன் பெற்றோர் எண்ணிக்கையில் தமிழகம் 4ம் இடத்தைப் பெற்றுள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…