கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது…!

Default Image

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டதால் மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழக அரசு மட்டும் அல்லாது மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கிய போதே, கோவை இஎஸ்ஐ மருத்துவமனை பிரத்யேக சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு கோவையிலிருந்து மட்டுமல்லாது சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொரோனா சிகிச்சைக்காக நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த மருத்துவமனையை சிறப்பாக செயல்பட்டதால் மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்